ரொறன்ரோ விமான நிலையத்தில் போக்கவரத்து பாதிப்பு நிலை

ரொறன்ரோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்தில் தொடர்ந்து தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய தினம் பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் 18 பேர் காயமடைந்ததை தொடர்ந்து விமானப் பயணங்களில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்த விமானம் சென் போல் நகரிலிருந்து பயணித்த நியைலில் விபத்துக்குள்ளாகியுள்ளது. விமானத்தில் 80 பயணிகள் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்துக்குப் பிறகு விமான நிலையத்தில் போக்குவரத்து பல மணி நேரத்திற்கு நிறுத்தப்பட்டது.

இன்றைய தினம் காலலையிலும் பியர்சன் விமான நிலையத்தின் இரண்டு ஓடுபாதைகள் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Bootstrap