கனடாவில் நாய் கடிக்கு இலக்கான சிறுவன் ஒருவன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கனடாவின் எட்மாண்டன் பகுதியில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.
14 வயதான சிறுவனே இவ்வாறு நாய் கடிக்கு இலக்காகி படுகாயம் அடைந்துள்ளார். என்ட்விஸ்டல் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த சிறுவன் உலங்கு வானூர்தி மூலம் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த நாயை வளர்த்த நபர் போலீசாரிடம் சரணடைந்தார் என தெரிவிக்கப்படுகிறது.