அமெரிக்காவினை புறக்கணிக்க கனேடிய மக்கள் முடிவு

ட்ரம்ப் மிரட்டலுக்கு அடிபணிந்து அவசர அவசரமாக பல நடவடிக்கைகளைத் துவக்கியுள்ளது கனடா அரசு. ஆனால், கனேடிய மக்கள் என்ன நினைக்கிறார்கள்?

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், கனடாவிலிருந்து போதைப்பொருட்களும், சட்டவிரோத புலம்பெயர்வோரும் அமெரிக்காவுக்குள் நுழைவதாகக் கூறி, அதனால் கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 25 சதவிகித வரி விதிக்கப்போவதாக மிரட்டினார்.

பயந்துபோன கனடா அரசு, ஒருபக்கம் அமெரிக்காவை பழிக்குப் பழி வாங்க நாங்களும் வரி விதிப்போம் என்று சொல்லிக்கொண்டே, மறுபக்கம், உடனடியாக எல்லை பாதுகாப்புக்காக ஏராளம் பொருட்செலவில் நடவடிக்கைகளைத் துவங்கியுள்ளது.

கனடா பயந்துபோனதைக் கண்ட ட்ரம்ப், தானும் 30 நாட்களுக்கு வரி விதிப்பைத் தள்ளி வைப்பதாக அறிவித்தார்.

ட்ரம்பின் மிரட்டுலுக்கு ஏற்ப தலையாட்டுவது வேண்டுமானால், கனடா அரசின் முடிவாக இருக்கலாம். ஆனால், கனேடிய மக்கள் ட்ரம்பின் வரி விதிப்பு குறித்து என்ன நினைக்கிறார்கள்?

ட்ரம்பின் வரி விதிப்பை, நீண்ட நாள் கூட்டாளி ஒருவர் செய்த துரோகமாக கருதுகிறார்கள் கனேடிய மக்கள்.

இது மிக மோசமான அவமதிப்பு, தங்கள் பொருளாதாரத்துக்கு நேர்ந்துள்ள துரோகம் என கனேடிய மக்கள் கருதுகிறார்கள்.

ட்ரம்ப் வரி விதிப்பை தள்ளி வைத்தாலும், மக்கள் மன நிலைமை மாறவில்லை. அமெரிக்கா இல்லையென்றால் என்ன, நாங்கள் வேறு இடத்தில் தொழில் செய்வோம் என்கிறார்கள் கனேடிய மக்கள்.

சொன்னதுபோலவே, கனேடியர்கள் பலர், அடுத்து ட்ரம்ப் என்ன செய்வார் என்றெல்லாம் காத்திருக்காமல், தங்கள் நடவடிக்கைகளைத் துவங்கிவிட்டார்கள்.

நெட்ஃப்ளிக்ஸ் சப்ஸ்கிரிப்ஷன் ரத்து, டிஸ்னி சுற்றுலா ரத்து, ஏன், கலிபோர்னியா ஒயினை ஒதுக்கிவிட்டு, உள்ளூர் பியருக்கு கூட சிலர் மாறிவிட்டார்கள்.

Bootstrap