ஐ.நாவிலிருந்து விலகிய அமெரிக்கா

ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகியுள்ளது.   ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில் மற்றும் பலஸ்தீன அகதிகளுக்கு உதவி வழங்கும் நிறுவனத்திலிருந்து அமெரிக்காவை விலக்கிக் கொள்ள ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நடவடிக்கை எடுத்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கடந்த சில வாரங்களாக பல சர்ச்சைக்குரிய முடிவுகளை எடுத்துள்ளார்.

பல சர்ச்சைக்குரிய முடிவுகளை எடுத்த  டிரம்ப்

பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியதும், உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகியதும் அவற்றில் முக்கியமானவை.

இந்த சூழலில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து அமெரிக்காவை விலக்கிக் கொள்ள டிரம்ப் முடிவு செய்துள்ளார்.

தனது முதல் பதவிக் காலத்தில், ஜூன் 2018 இல், டிரம்ப் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து அமெரிக்காவை விலக்க நடவடிக்கை எடுத்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்  அமைப்பு பொருத்தமற்ற நாடுகளுக்கு தங்குமிடம் வழங்குவதாகவும், இஸ்ரேல் மீது தொடர்ந்து விரோதப் போக்கைக் காட்டுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

எனினும் பின்னர் , 2021 ஆம் ஆண்டில் அப்போதைய ஜனாதிபதி ஜோ பைடனின் தலைமையில் அமெரிக்கா மீண்டும் பார்வையாளராக இணைந்தது.

இதற்கிடையில், பலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணி நிறுவனத்திற்கு (UNRWA) நிதியுதவியை நிறுத்துவதற்கான நிர்வாக உத்தரவில் டிரம்ப் சமீபத்தில் கையெழுத்திட்டார்.

 

Bootstrap