கனடிய பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையில் கடுமையான முரண்பாட்டு நிலை நிலவி வருகின்றது. கனடிய ஏற்றுமதி பொருட்களுக்கு அமெரிக்கா 25 வீத வரியை விதித்துள்ளது.
இந்த வரி விதிப்பிற்கு பதிலடியாக கனடாவும் அமெரிக்கா இறக்குமதிகள் மீது வரி விதிப்பதாக அறிவித்துள்ளது.
இவ்வாறான ஒரு பின்னணியில் இரு நாடுகளுக்கு இடையில் வர்த்தகப் போர் ஏற்பட்டுள்ளது.